போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி காவிரி பாலம் மூடப்பட்டது

போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி காவிரி பாலம் மூடப்பட்டது

திருச்சி மலைக்கோட்டை - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் சிந்தாமணி பகுதியில் அகன்ற காவிரியின் குறுக்கே பாலம் உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த பாலம் 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி 76 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. 540 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்ட இக்பாலம் திருச்சியின் அடையாளங்கள் ஒன்றாக இருந்து வருகிறது. இப்பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஏற்பட்டுள்ள இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்திற்கு அவ்வபோது இடையூறு ஏற்பட்டது. 

தொடர்ந்து காவிரி பாலத்தில் சில தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் புதிதாக ஒரு பாலம் கட்ட வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் காவேரி பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை முடிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காவிரி பாலத்தில் 6 கோடியே 87 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. இதில் பாலத்தின் அடிப்பகுதிகள் பணிகள் முடிந்த நிலையில் மேல் பகுதியில் பணிகள் இன்று தொடங்குகிறது. இதில் மேற்பரப்பில் இணைப்புகள் சரி செய்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளுடன் சிறிய சிறிய பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் 5 மாதங்கள் நடைபெற உள்ளது.

இதற்காக சிந்தாமணி காவிரி பாலம் இன்று அதிகாலை மூடப்பட்டது. பணிகள் முடியும் வரை எந்த வாகனம் அனுமதிக்கப்படாது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் அவ்வப்போது பணிகளுக்கு ஏற்ப பாலத்தின் ஓரத்தில் அனுமதிக்கப்படும். பாலம் மூடப்பட்ட பின் அதன் பிறகு வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. காவிரி பாலத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO