பணிக்கு சென்ற திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர் சாலையில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

பணிக்கு சென்ற திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர் சாலையில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா அருள் ( 35 ). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் துவாகுடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுக்குடி சோதனை சாவடியில் பணி வழங்கப்பட்டிருந்து.

இதனையடுத்து நேற்று உடல்நிலை சரியில்லை காரணத்தினால் விடுமுறை வேண்டுமென்று ஆயுதப்படை உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு தற்போது திருவெறும்பூர் டிஎஸ்பி பொறுப்பில் உங்களை பணியமர்த்தி உள்ளதாகவும், அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் காவலர் வோஸ்வா அருள் கொரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் அவர் இன்று விடுப்பில் எடுத்துள்ளார். தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்று தெரிவித்ததால் அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பி  தேவராயநேரி அடுத்த புதுக்குடி சோதனைச் சாவடி பணிக்கு வந்த ஜோஸ்வா அருள் சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக சக காவலர்கள் அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு துவாக்குடி மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோஸ்வா அருள் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

தனக்கு உடல்நிலை சரியில்லை என விடுமுறை கேட்டு அதற்கு அனுமதி அளிக்காத அதிகாரிகளால் தற்போது ஒரு காவலர்கள் மத்தியில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காலத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு ஏ.பி.சி என்ற சுழற்சி முறையில் பணி வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் ஏ.பி என்ற முறையில் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாகவும், இதனால் சில காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல் நிலை சரியில்லாத நிலை ஏற்படுவமாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உயிரிழந்த காவலர் ஜோஸ்வா அருளுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மேலும்  காவலர் ஜோஸ்வா அருள் வரலாற்று காரணமாக கொரோனா தொற்று  பாதிக்கப்பா அல்லது  வேறு ஏதும் உடல்நிலை பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும். காவலர் உயிரிழந்தது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC