திருச்சி மாநகர தலைமை காவலர் மரணம்

திருச்சி மாநகர தலைமை காவலர் மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்தவர் கதிரவன் (50). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 1996 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்கள் பணி புரிந்து தலைமை காவலராக பதவி உயர்வு பெற்று திருச்சி கண்டோண்மென்ட் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்கு தயாராக இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது இறப்பு செய்தி திருச்சி மாநகர காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision