திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி முதலிடம்

திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி முதலிடம்

RPF பயிற்சி மையம் திருச்சியில் (01.08.2024) முதல் (03.08.2022) வரை, RPF மண்டலங்களுக்கு இடையிலான நாசவேலை எதிர்ப்பு சோதனை மற்றும் அறிவியல் புலனாய்வுப் போட்டிக்கள் -2024 நடத்தப்பட்டது.

தெற்கு ரயில்வேயில் இருந்து TPJ (திருச்சிராப்பள்ளி), MDU (மதுரை), TVC (திருவனந்தபுரம்), SA (சேலம்), MAS (சென்னை) ஆகிய 05 RPF மண்டலங்கள் அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. போட்டியின் நிறைவு விழா (03.08.2024) அன்று 16:30 மணிக்கு மண்டல RPF பயிற்சி மையம்/திருச்சியில் நடத்தப்பட்டது.

இதில் டாக்டர்.அபிஷேக், IRPFS, Sr.DSC/TPJ விழாவின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் உதவி ஆய்வாளர் s .சரவணன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தலைமையிலான திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி இரண்டு போட்டியிலும் ஒட்டுமொத்த முதல் பரிசை பெற்றது. இரண்டாவது இடத்தை சேலம் மற்றும் திருவனந்தபுரம் அணிகள் பெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision