திருச்சி சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (07.09.2023) உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் உண்டியல் காணிக்கை விவரம் : 1 கோடியே 07 லட்சத்து 13 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 931 கிராம் தங்கம், 4 கிலோ 820 கிராம் வெள்ளி, 391 அயல்நாடு கரன்சிகள், 3347 அயல்நாட்டு நாணயங்கள் இருந்தன.

உண்டியல் திறப்பில் கலந்துக் கொண்டவர்கள் விவரம் :

1. .சி.கல்யாணி, இணை ஆணையர் / செயல் அலுவலர்.

2. இரா. ஹரிஹரசுப்பிரமணியன், துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலர்

3. இரா. இளையராஜா, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசாமி திருக்கோயில், நாமக்கல் இரட்டை பூட்டு அலுவலர் (கூடுதல் பொறுப்பு)

4. ஆ.இரவிச்சந்திரன், உதவி ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிரு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்கோயில்.

5. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில் 

6. நா. சீனிவாசன். ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்

7. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்,

8. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision