உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு சார்பில் மரகன்றுகள் வழங்கும் விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு  சார்பில் மரகன்றுகள் வழங்கும் விழா

திருச்சி பொன்மலை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் இன்று 08-03-21 திங்கட்கிழமை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு மற்றும் Rockfort Star Acadamey     கிளப் சார்பில் மரகன்றுகள் வழங்கும் மற்றும் நடும் நிகழ்வு அறிஞர்கள் வரலாற்று சாதனையளர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியேருடைய வாழ்கை வரலாறு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் T.கார்த்திகா தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹேப்சி ச்த்தியராக்கினி,சமூக ஆர்வலர் சித்ரா மூர்த்தி, அல்லிகொடி ,தினசேவை அறக்கட்டளை நிர்வாகி S.பகவதி Dr.A.P.J அப்துல்கலாம் பசுமை இந்தியா அறக்கட்டளை நிர்வாகி A.R.முத்துலட்சுமி உலக சாதணையாளர் தர்ணிகா  உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரகன்றுகள் வழங்கினர்.

நிகழ்வில் சமீபத்தில் கோவை மற்றும் சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள  விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி உள்ளிட்ட 30 பதகங்களை வென்று தேசிய அளவில் நடைபெறவுள்ள தடகள விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வாகி திருச்சிக்கும் தமிழகத்திற்க்கும் பெருமை சேர்த்த Rock fort Star Academy யை சேர்ந்த தடகள விளையாட்டு  வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் மரகன்றுகள் மற்றும் புத்தம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  தினேஷ்குமார் ரத்தினகுமார் இளங்கோ தினசேவை அறக்கட்டளை நிர்வாகி சிவபிரகாசம் ஜான்,A.Kபுஷ்பராஜ் அருண்குமார்,சந்தானலட்சுமி ,அபிஷா, ஜனனி,ஜெயந்தி,புஷ்பராஜ், தருன் ஆகாஷ்,யாசிகா,சர்வேஸ்வரா, யோகாம்பாள் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சர்வேதச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான மணிகன்ட ஆறுமுகம் அவர்கள் செய்திருந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I