சாலை விபத்தில் திருச்சி செய்தியாளர் பலி

சாலை விபத்தில் திருச்சி செய்தியாளர் பலி

R.நீலக்கண்ணன் விராலிமலை தினகரன் பகுதி நேர நிருபராக பணியாற்றி, திருச்சி மாவட்ட ஸ்டாஃப் நிருபராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். விராலிமலையில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் பைக்கிலோ அல்லது காரிலோ பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.

வழக்கம் போல் பணி முடிந்து நேற்று இரவு தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பியபோது, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் அருகே சரக்கு வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருச்சி விஷன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO