திருச்சி கொத்தனார் கொலை - 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

திருச்சி கொத்தனார் கொலை -  4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

திருச்சி மாவட்டம் புங்கனூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). நேற்று முன்தினம் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ராம்ஜிநகரை சேர்ந்த வாலிபர் உடன் மோதல் ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் கார்த்திக்கு ஆதரவாக அவரது நண்பர் உதயகுமார் (31) கொத்தனார் உள்பட 4 பேரை எதிர் கோஷ்டியினர் செங்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த உதயகுமார் உள்பட நான்கு பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் உதயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்ககோரி உதயகுமாரின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சோமரசம்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் நான்கு பேர் மற்றும் முருகனாந்தம் (23), தீனதயாளன் (25), ஹாரிஸ் (24), லோகேஸ்வரன் (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

அதில் 17 வயது சிறுவர்கள் நான்கு பேரையும் கீழரண் சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மற்ற 4 பேரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision