திருச்சியில் நாளை (06.07.2022) சமயபுரம், வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - அமைச்சர் ஆய்வு

திருச்சியில் நாளை (06.07.2022) சமயபுரம், வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - அமைச்சர் ஆய்வு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு திருவிழா நாளை (06.07.2022) நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இக்கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுப் பணிகளையும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருக்குடமுழுக்குப் பணிகள் சிறப்புடன் நடைபெற அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இன்று (05.07.2022) வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இணை ஆணையர் கல்யாணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO