திருச்சியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை உட்பட இருவர் கைது

திருச்சியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை உட்பட இருவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை ராஜா. இவர் தனியார் கம்பெனியில் வெல்டர் ஆக வேலை பார்த்து வருகிறான். இவரது மனைவி இந்திராணி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது 11 வயது மகள் அருகில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியிடம் அவரது தந்தை ராஜா மற்றும் அவரது நண்பரான கணேசன் ஆகிய இருவரும் சிறுமியிடம் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தனது தாய் இந்திராணியிடம் சிறுமி கூறி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனது சித்தி கெஜலட்சுமியிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கஜலட்சுமி உடனடியாக இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருச்சி மாவட்ட குழந்தைகள் நல காப்பக நிர்வாகி பிரபு மூலம் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் ராஜா மற்றும் கணேசனை கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO