திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு வயது குழந்தை பலி

திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு வயது குழந்தை பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசிபவர் பெருமாள். இவர் அங்கு உள்ள காட்டுக்கொட்டையை பகுதியில் தனது மனைவி பூவிலா மற்றும் இரண்டு வயது குழந்தை சர்வேஷ் அகியோருடன் வசித்து வருகிறார். இவர் இன்று அதிகாலை வழக்கம் போல் பால் கறவைக்கு சென்று விட்டார்.

வீட்டில் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை இருந்துள்ளனர். மனைவி சமைத்துக் கொண்டிருந்தபோது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சர்வேஷ், அருகே மின் மோட்டாருக்கு செல்லும் வயரில் எதிர்பாராத விதமாக கை வைத்துள்ளார். பழுது அடைந்த மின் வயரில் மின்சாரம் சென்றுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இறந்து போன குழந்தையின் உடலை உடல்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இரண்டு வயது குழந்தை இறந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision