தேடப்பட்ட வந்த ரவுடி திருச்சியில் என்கவுண்டர்

தேடப்பட்ட வந்த ரவுடி திருச்சியில் என்கவுண்டர்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன் (30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.கடந்த மே 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காகஇவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அனைவரையும் திருவரம்பூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கின்ற ஜகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

காவல்துறையினரை தாக்கி விட்டு தற்போது முயன்ற ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் மீது பல்வேறு கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision