திருச்சி மக்களுக்கு நாளை முதல் எச்சரிக்கை - ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சி மக்களுக்கு நாளை முதல் எச்சரிக்கை - ஆட்சித்தலைவர் தகவல்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 35,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை (14.08.2024) காலை 06:00 மணி முதல் 10,000 கன அடி தண்ணீர திறக்கப்பட உள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொருத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதனால் கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச் செல்லவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.