எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் - கே.என்.நேரு

எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் - கே.என்.நேரு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. முதன்மைச் செயலருமான கே.என்.நேரு மேற்கு வாக்கு எண்ணும் மையத்ததை பார்வையிட்டார். பின்னர் அவர் சி.சி.டி.வி. கண்காணிப்பு எல்.இ.டி. திரை மூலம் பார்வையிட்டார்.

பின்னர் பாதுகாப்பு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கே என் நேரு, பாதுகாப்பு தொடர்பாக அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 20 தினங்கள் இருக்கிறது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்ட போது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr