இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி:

இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி:

திருச்சி மணப்பாறை அருகே இரண்டு தலை, 4 கண்களுடன் பிறந்த கன்று குட்டியை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

மணப்பாறை அருகே மீன வேலி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ். இவர் வளர்த்து வந்த பசுமாடு நேற்று அதிகாலை கன்று ஈன்றது. அந்த கன்று இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் பிறந்துள்ளது

Advertisement

தகவலறிந்த கால்நடை மருத்துவர் இந்திராணி கன்றுக்குட்டியை பரிசோதித்தார். இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் பிறந்த கன்று குட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.