போலீஸ் எனக்கூறி பணம் பறித்த வாலிபர் கைது

போலீஸ் எனக்கூறி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சியை சேர்ந்த ஒருவரை சில நாட்களுக்கு முன்பு மரபு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்போது எதிர்முனை பேசிய அந்த நபர் தன்னை போலீஸ்கார் என கூறிக்கொண்டார். மேலும் நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

இதற்காக உங்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய உள்ளோம் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போனவர் வழக்கு ஏதும் பதிய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். உடனே அந்த மர்ம நபர் அப்படியானால் தனது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் படி கூறியுள்ளார். இதை நம்பி அவர் முதல் தவணையாக ரூபாய் 5000, அடுத்த தவணையாக 15,600 என ரூபாய் 20,600யை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர். பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் போலீசார் போல் நடித்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் கோவை வடவள்ளி சேர்ந்த அசோக் (23) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO