செல்போன் பறிக்கப்படும் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

செல்போன் பறிக்கப்படும் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்..... தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும்.இல்லையென்றால் பள்ளிகள் மாற்று சான்றிதழ் கேட்டு வற்புறுத்த கூடாது. தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது உண்மை தான். செல்போனை மாணவர்கள் வகுப்பறைகளுக்கு  கொண்டு வரக்கூடாது. மீறிக் கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது என தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. எனவே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். வரும் கல்வியாண்டில் 9494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர் என குறிப்பிட்டார்.

மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளனர். எனவே 11,12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறந்து 5 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காவல் துறை அதிகாரிகள்  மூலம்  மாணவர்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரம்  உளவியல் பயிற்சிகள் வழங்கப்படும். 90 சதவீத மாணவர்கள் தற்போது தடுப்பூசி  செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத 10 சதவீத மாணவர்கள் சுகாதாரத் துறை மூலமாக உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO