திருச்சி மாவட்டத்தில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 17 
இருசக்கர வாகனங்கள் மற்றும் 8 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 25 
வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே வருகின்ற 14.02.2022-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் 
நடைபெறவிருக்கிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 13.02.2022-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 14.02.2022-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000/- மற்றும் நான்கு சக்கர 
வாகனத்திற்கு ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து 
கொள்ளவேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12 % மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 % சேர்த்து முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் தெரிவித்துள்ளார்.

ஏலம் எடுக்க விரும்புவோர் நேரிலோ (அ) கீழ்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 0431-2333684,
94981-58025

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn