திருச்சி விமான நிலையத்தில் பவுடர் டப்பாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட 23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பவுடர் டப்பாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட 23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது உடைமைகளை வைத்திருந்த முகத்துக்கு பூசக் கூடிய பவுடர் டப்பாவில் மறைத்து 11.50 லட்சம் மதிப்பிலான 234 கிராம் தங்கத்தையும், மற்றொருவர் 11.16 லட்சம் மதிப்பிலான 227 கிராம் தங்கத்தை கடத்தியது தெரியவந்தது.

இரண்டு பேரிடமிருந்து மொத்தம் ரூபாய் 22.67 லட்சம் மதிப்பிலான 461 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn