மேல தாளம் வெற்றிலை தாம்புலத்துடன் பெற்றோர்களுக்கு அழைப்பிதழ்

மேல தாளம் வெற்றிலை தாம்புலத்துடன் பெற்றோர்களுக்கு அழைப்பிதழ்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும் 10ஆம் தேதி நடைபெறும் பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு கூட்டத்திற்கும், 02 ஆம் தேதி நடைபெறும் ஆயத்த கூட்டத்திற்கும் பெற்றோர்கள் பங்கேற்க மேல தாளத்துடன் வெற்றிலை தாம்புலத்துடன் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் கா.மருதநாயகம், கலைக்காவேரி விரிவுரையாளர் சதிஷ், ஆசிரியர் சுரேஷ்ராஜன் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பெல்ஸிட்டாமேரி, ஆசிரியர் பயிற்றுனர் செந்தில்குமார், IED ஆசிரியர் இந்துமதி, தலைமை ஆசிரியர் இரா. சுகுமார் ராமகிருஷ்ணன், இடைநிலை ஆசிரியர் அனுராதா, சத்துணவு அமைப்பாளர் ஜோதி, காலை உணவு சமையலர் ஞான சௌந்தரி, ITK கவிதா, சுமதி, சங்கீதா, செல்வி சுவேதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision