திருச்சியில் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது

திருச்சியில் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (61). இவர் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் சௌந்தர்ராஜன் நேற்று காலை சூப்பர் மார்க்கெட்டை திறப்பதற்காக வந்து பார்த்த போது சூப்பர் மார்க்கெட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது உள்ளது. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது சூப்பர் மார்க்கெட் உடைத்து உள்ளே சென்ற 3 பேர் கல்லாப்பெட்டி பார்த்த போது பணம் இல்லாததால் கடையில் இருந்த பழங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சௌந்தர்ராஜன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு நவல்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், பூலங்குடி காலனியை சேர்ந்த ரமேஷ் மனன் சச்சின் (20) அவரது நண்பர் நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த குமார் மகன் வின்சென்ட் (19), திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் சந்தோஷ் (19) ஆகிய 3 பேரும் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn