8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

திருச்சி மாவட்டம், சமயபுரம் இந்திரா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் 28 வயதான மஞ்சு பிரியா. பெற்றோரை இழந்த மஞ்சு பிரியா இந்திரா நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன 55 வயதான சங்கர்பாபு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் மஞ்சு பிரியா மீண்டும் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு பிரியா அவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மஞ்சு பிரியா வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சு பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO