பெண் சகவாசத்தால் வேன் டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற கார் டிரைவர்

பெண் சகவாசத்தால் வேன் டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற கார் டிரைவர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி சேர்ந்தவர் அசோகன் இவரது மகன் சக்திகுமார் (34) இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார்.

இந்த நிலையில் திருவெறும்பூர் காந்திநகர், காமராஜர் நகர், சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் முத்துப்பாண்டி (32). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே பெண் சவகாசம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் முத்துப்பாண்டி சக்தி குமாரை சக்தி குமார் வீட்டு வாசலில் வைத்து நள்ளிரவில் கத்தியால் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந் சக்தி குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்தி குமார் உடலை கைப்பற்றி பெரியது பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முத்து பாண்டியை கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO