மகனை மீட்டு தர திருச்சி ஆட்சியர் காலில் விழுந்து கதறிய தாய்

மகனை மீட்டு தர திருச்சி ஆட்சியர் காலில் விழுந்து கதறிய தாய்

தண்ணீர்,உணவு இன்றி உக்ரைன் தலைநகரில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத தாய் .திருச்சியில் தங்களது பாசப்போராட்டத்தால் அனைவரையும் கண்கலங்க வைத்த பெற்றோர்.

இன்று(27.02.2022)திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசுவின்  காலில் விழுந்த ராஜேஷின் தாய் ஜெயலட்சுமி தனது மகனை எப்படியாவது மீட்டு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

https://youtu.be/ffLIgBlLOIA

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறி உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளதால் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO