திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் Omega நிறுவனம் அணி வெற்றி

திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் Omega நிறுவனம் அணி வெற்றி

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி காவல்துறைக்கும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விளையாட்டுப் போட்டிகள் கன்டோன்மென்ட் காவல் சரகம் சார்பாக நடத்தப்பட்டது. தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கிரிக்கெட், எறி பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அணி மற்றும் சாரநாதன் கல்லூரி, தேசிய கல்லூரி மற்றும் Omega, VDart ஆகிய பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் அணிகள் கலந்து கொண்டன. இன்று நடைபெற்ற உள் அரங்கு கிரிக்கெட் போட்டியில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் நடைபெற்றது.

ஏழுவர் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் தேசிய கல்லூரி அணியை வீழ்த்தி Omega நிறுவனத்தின் அணி வெற்றி பெற்றது. நாளை பெண்களுக்கான எறிபந்து, ஆண்களுக்கான வாலிபால் போட்டி நடைபெற உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO