‌ வெல்டிங் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

‌  வெல்டிங் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 23.07.22-ம்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை பஜார் அருகில் வெல்டிங் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500/- பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிவராம்  என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில்  சிவராம் மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், பொன்மலை பகுதியில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்குகள் உட்பட 3 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே,  சிவராம் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கத்தியை காண்பித்து பணம் பறிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO