மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் மாற்று திறனாளிகள் அரசு பேருந்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்ட முழுவதும் நிபந்தனை இன்றி பயணம் செல்லும் வகையில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. 

இந்த சிறப்பு முகாமில் பார்வையற்றோர்கள் இலவச பேருந்து பயண அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது இலவச பேருந்து பயண அட்டையினை புதுப்பித்துக் கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision