இறுதிக்கட்ட பிரச்சாரம் - ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு நிறைவு செய்த அதிமுக வேட்பாளர் கருப்பையா

இறுதிக்கட்ட பிரச்சாரம் - ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு நிறைவு செய்த அதிமுக வேட்பாளர் கருப்பையா

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார். கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில், கடந்த மாதம் 28 ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு ரங்கநாதரை தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் அதிமுகவினரும், பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் சிறப்பான வரவேற்பு அளித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதை தொடர்ந்து, திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து வேட்பாளர் கருப்பையாவின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பயணமானது துவங்கியது. 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை, ஏர்போர்ட், திருவெறும்பூர், அரியமங்கலம், காந்தி மார்க்கெட், அண்ணா சிலை வழியாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு இறுதி கட்ட பிரச்சாரம் முடிவடைந்தது.

இதில், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப. குமார், சீனிவாசன், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், அணிச் செயலாளர்கள் கார்த்திகேயன், முத்துக்குமார், இப்ராம்ஷா, பகுதிகழகச் செயலாளர்கள் அன்பழகன், பூபதி, முஸ்தபா, சுரேஷ் குப்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision