திருச்சி வெங்காய மண்டியில் அதிரடி சோதனை:

திருச்சி வெங்காய மண்டியில் அதிரடி சோதனை:

திருச்சி வெங்காய மண்டியில் இன்று குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பழைய பால்பண்ணை அருகில் உள்ள வெங்காயம் கடையில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஆய்வாளர் சேரன் தலைமையில் நான்கிற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர் .

வெங்காயம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து வியாபாரிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரிகளின் கையிருப்பாக சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயமும் மொத்த வியாபாரிகள் 15 மெட்ரிக் டன் வெங்காயமும் வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.