திருச்சியில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

திருச்சியில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டிடுகின்றனர். இனி தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் அனல் பறக்கும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் கல்லறை மேட்டு தெரு அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் மதில் சுவர் கட்டப்படுவதை கண்டித்து வீடு தோறும் கருப்பு கொடி ஏற்றி

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கல்லறை மேட்டு தெரு இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் சார்பில் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்பொழுது இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision