இரு தரப்பினர் மோதலில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இரு தரப்பினர் மோதலில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி லால்குடி அருகே உள்ள சங்கிந்தியை சேர்ந்த ஜீவானந்தம் (33) என்பவர் தனது தாய் பிறந்த ஊரான திருவளர்ச்சோலையில் வரும் பொழுது அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகேந்திரனுக்கு அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6ம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது ஜீவானந்தமும், நாகேந்திரனும் சென்றுள்ளார் அப்பொழுது நாகேந்திரனை விக்னேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக திருவளர்சாலை கீழ தெருவை சேர்ந்தவர்கள் விக்னேஷ் வீட்டிற்கு கடந்த 7ம் தேதி இரவு கேட்பதற்காக சென்று உள்ளனர். அப்பொழுது விக்னேஷ் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும், ஜீவானந்தம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஜீவானந்தம், நெப்போலியன், சங்கர் குரு, கதிரவன்,கமலேஷ் மற்றும் திருவளர்ச்சோலை வடக்கு தெருவை சேர்ந்த நாகேந்திரன் ஆகியோரை விக்னேஷ் தரப்பைச் சேர்ந்தவர் அரிவாள், கத்தி ஆகியவற்றில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நெப்போலியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கதிரவன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். மற்றவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய உதவி ஆணையர் நிவேதா லட்சுமி விக்னேஷ் தரப்பைச் சேர்ந்த விக்னேஷ் (35), பிரசாந்த், அஜய் ( 29 ), எசன கோரையை சேர்ந்த அப்பு, சரண்ராஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கதிரவன் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் எற்பட்டு உள்ளதால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision