போதை ஒழிப்பு தினம் - மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

போதை ஒழிப்பு தினம் - மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி RESCAPES விரிவாக்கத்துறை மற்றும் திருவளர்ச்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விளைவுகள் மற்றும் தீமைகள் பற்றியும் மற்றும் உறுதிமொழி மற்றும் போதை பொருள் நான் பயன்படுத்த மாட்டேன் என்று கையெழுத்து நிகழ்வும் மாணவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

சிறப்பு விருந்தினராக சன் ரைஸ் குடிபோதை மறுவாழ்வு மையம் மனநல ஆலோசகர் ஆனந்த் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் திருஞானம் கலந்து கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், கதிரவன் மற்றும் விமல்ராஜ், ஜெயச்சந்திரன் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி திருவளர்ச்சோலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision