வயநாடு குழந்தைகளுக்கு கூடுதல் உதவிக்கரங்களை அன்புடன் அழைப்பு

வயநாடு குழந்தைகளுக்கு கூடுதல் உதவிக்கரங்களை அன்புடன் அழைப்பு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெற்றோர் சொந்த பந்தங்களை இழந்து தவிக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் உங்களின் பேராதரவுடன் திருச்சி விஷன் களம் இறங்கி உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக ஏராளமான நல்லுள்ளங்கள் உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அவர்களின் கரத்தையும் எங்களை ஊக்கப்டுத்தி வலுப்படுத்த கூடுதலாக குழந்தைகளுக்கு உதவிட மேலும் கருணை உள்ளங்கள் வரவேற்கப்படுகின்றனர். தங்களால் இயன்ற உதவிகளை இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு செய்து அவர்கள் புதியதொரு வாழ்க்கையை தொடங்கும் நிலையில் உள்ளதால் மனதளவில் உற்சாகமடைய உதவி செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

தங்களால் இயன்ற விளையாட்டுப் பொருட்களை, உடைகளை கொடுத்தும் குழந்தைகளுக்கு உதவினால் நன்றியுடன் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். நீங்கள் கொடுக்க விரும்பும் பொருட்கள் போஸ்டரில் உள்ள முகவரி மற்றும் தொலைபேசி எண் தொடர்பு கொண்டு கொடுக்கவும். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision