போதை ஒழிப்பு தினம் - தனியார் பள்ளி மாணவர்கள் பேரணி

போதை ஒழிப்பு தினம் - தனியார் பள்ளி மாணவர்கள் பேரணி

தமிழ்நாட்டில் போதை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டி தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை லால்குடி காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா துவக்கி வைத்தார் .

பேரணியில் சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனி பிரிவு காவலர்கள் அன்பரசன் மகாதேவன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision