அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சிராப்பள்ளி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனசுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர் முன்னுரிமையற்றவர்கள் (General Turn General Non-Priority) இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இப்பணிகாலியிடத்திற்கு கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இப்பணியிடத்திற்கு 01.07.2022 அன்றைய நிலையில் குறைந்தபட்ச வயது 18-ம் பொது பிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும், BC, MBC/DNC பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், SC/ST & SCA பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதியான மனுதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய விவரங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகின்ற

15.11.2022-க்குள் உதவி இயக்குநர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2022, மாலை 5.45 மணி. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்பட மாட்டாது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO