திருச்சி ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு சீல்

திருச்சி ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு சீல்

திருச்சி ரயில் நிலையம் மதுரை ரோட்டில் உள்ள சூப்பர் டீ ஸ்டால் கடை மற்றும் விமான நிலையம் காமராஜர் நகரில் உள்ள ரோஜா டீ ஸ்டால் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் அவசர தடையானை உத்தரவின்படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் இரண்டு கடைகளுக்கும் சீல் செய்யப்பட்டது

திருச்சி ரயில் நிலையம் மதுரை ரோட்டில் உள்ள சூப்பர் டீ ஸ்டால் கடையில் 09.08 2021 அன்றும், விமான நிலையம் காமராஜா நகரில் உள்ள ரோஜா டீ ஸ்டால் கடையில் 21.12.2021 அன்று முதல் ஆய்வில் இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை அறிந்து ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் ரயில் நிலையம் மதுரை ரோட்டில் உள்ள சூப்பர் டீ ஸ்டால் கடையில் 25.04. 2022 அன்று விமானநிலையம் காமராஜர் நகரில் உள்ள ரோஜா டீ ஸ்டால் கடையில் 25.04.2022 அன்று இரண்டாம் ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய தினத்தன்று அவசர தடை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் 28.04.2022 அன்று அவசர தடை உத்தரவு வழங்கி அதன் அடிப்படையில் அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் கூறுகையில் திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டால்

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தக் கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், வசந்தன், ஸ்டாலின், செல்வராஜ், ஐன்ஸ்டீன் மற்றும் மகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO