திருச்சியில் பட்டாக் கத்தியை கழுத்தில் வைத்து மாமு பணத்தை கொடு என மிரட்டி கொள்ளையடித்த கும்பல் 

திருச்சியில் பட்டாக் கத்தியை கழுத்தில் வைத்து மாமு பணத்தை கொடு என மிரட்டி கொள்ளையடித்த கும்பல் 

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த பக்ரூதின். திருச்செந்தூர் சென்று  கார் விற்ற பணம் ரூபாய் இரண்டு லட்சம் எடுத்து திருச்சி மன்னார்புரம் பகுதியில் இறங்கி வந்துள்ளார். அப்பொழுது காஜா நகர் நீதிபதி குடியிருப்பு முன் நடந்து வந்து கொண்டிருந்ததார்.

அப்போது என்ன மாமு என்ன வச்சிருக்க குடு எல்லாத்தையும் என இரண்டு சக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேர் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து நடந்து சென்றதால் பக்ருதீனை  வழிமறித்து பட்டாக்கத்தி கழுத்திற்க்கு கொண்ட வந்தனர். அப்போது பக்ரூதின் தடுத்தார்.    

மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரம்ஜானுக்கு வாங்கிய தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை பறித்து சென்றனர். இதுகுறித்து கேகே நகர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாக் கத்தியை கழுத்திற்க்கு கொண்டு வந்தை தடுத்ததால் அவரது கையில் காயம் ஏற்பட்டது .அதில் தற்போது ஏழு தையல்கள் போடப்பட்டு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO