திருச்சியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் வரும் 25ம் தேதி மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதிய தற்காலிக சில்லரை வணிகம் செய்ய இருப்பு வைத்துக்கொள்ள பட்டாசு கடை வைப்போர் இ- சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Advertisement

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் 2021 ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு வணிகம் செய்ய இருப்பு வைத்துக் கொள்ள உரிமை கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008 கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Advertisement