முந்திக்கொண்ட அப்பு - ரூம் போட்டு கொலைக்கு ஸ்கெட்ச்

முந்திக்கொண்ட அப்பு - ரூம் போட்டு கொலைக்கு ஸ்கெட்ச்

திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபிசர் காலனியில் ஸ்ரீ தாயார் ஹோம் (நர்சிங் ) கேர் சர்வீஸ் அலுவலகம் வைத்திருந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வந்தார். கடந்த (11.12.2023) அன்று இரவு பிரபாகரன் தனது அலுவலகத்தில் இருந்த போது முகமூடி அணிந்து வந்த 3 பேர், பிரபாகரனை வெட்டி கொலை செய்தனர்.

அந்த அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (38), பஷீர் (29), ரியாஸ் ராஜேஷ் (24) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அப்பு என்கின்ற ஹரிஹரன் தலைமறைவாகியுள்ளார். பின்னர் நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில், ஹரிகிருஷ்ணன் என்பவர் தங்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்து பிரபாகரனை கொலை செய்ய சொன்னதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் ஹரிகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். பின்னர் ஹரிகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில்.... என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஜெகனிடம் பிரபாகரன் தன்னை கொலை செய்ய தெரிவித்து முன் பணம் கொடுத்துள்ளது தகவல் கிடைத்தது. அதனால் கூலிப்படை வைத்து பிரபாகரனை கொன்றதாக தெரிவித்துள்ளார். 

மேலும் ஹரிகிருஷ்ணன் மீது மொத்தம் 22 வழக்குகள் உள்ளன. குறிப்பாக வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருடுவது, விலையுயர்ந்த கார்களை திருடுவது, திருட்டு கார்களை விற்பது உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

மேலும் அப்பு என்கிற ஹாரிகிருஷ்ணன் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் மூன்று நாட்கள் அறை எடுத்து தங்கி உள்ளார். அப்போது ஐந்து ரவுடிகளை வரவழைத்து அவர்களின் ஆலோசனைப்படி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision