20% இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு!!

20% இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு!!

வன்னியர்களுக்கு 20% சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

திருச்சி மாநகர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அனைத்து சாதியினருக்கும் மற்றும் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் பேரணியாகச் சென்று மனு கொடுத்தனர். 

Advertisement

இந்த இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் பிரின்ஸ் மாநில துணை பொது செயலாளர்,மாவட்ட செயலாளர் திலிப் குமார் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.