திருச்சி மாநகரில் நாளை (17.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (17.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம் பொன்நகர் பிரிவுக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வலதுபுறம் மின்வாரிய அலுவலகம் முதல் பிரபு நர்சிங் ஹோம் மருத்துவமனை வரை பொன் நகர் முதல் தெரு, இரண்டாம் தெரு, 9ஆம் தெரு, 10ம் தெரு, 11 ஆம் தெரு

அதேபோல் தென்னூர் பிரிவுக்குட்பட்ட புத்தூர் நால்ரோடு முதல் அருணா தியேட்டர் வரை ஆகிய பகுதிகளில் உயர் அழுத்த மின் பாதைகளில் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்

நாளை (17.03.2022) காலை 09.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO