திருச்சியில் நாளை மறுநாள் (22.10.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை மறுநாள் (22.10.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 22.10.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு செய்யப்பட உள்ளது.

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நகர், கீழபெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, திருமணமேடு, பச்சாம்பேட்டை, மயிலரங்கம், பம்பரம்சுற்றி, வாளாடி, தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம்,

அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்க்குப்பை, R.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn