மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் மில்கேட் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கன்டோன்மென்ட் மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராம்ஜிநகர் பகுதியை மையமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, உடனடியாக கஞ்சா விற்பனை தடை செய்ய காவல்துறையினர் முன்வர வேண்டும். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுமட்டுமின்றி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் நாங்களே நேரில் சென்று காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர், இல.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கள்ளிக்குடி ராஜேந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO