காதுகேளாதோர் வாய்ப்பேசாதோருக்கு சிலம்பம் பயிற்சி தொடக்கம்

காதுகேளாதோர் வாய்ப்பேசாதோருக்கு சிலம்பம் பயிற்சி தொடக்கம்

திருச்சி மணிகண்டம் காதுகேளாதோர் வாய்ப்பேசாதோர் ஒர்த் தொழில்பயிற்சி மாணவர்களுக்கு தமிழன் சிலம்பம் பாசறை நாட்டார் கலை நடுவம் சார்பில் சிலம்பம் பயிற்சி தொடங்கப்பட்டது. தமிழன் சிலம்பம் பாசறை சார்பில் 50 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வில் வழக்குரைஞர் மணிபாரதி தலைமை வகித்தார்.

தொழில் பயிற்சி மையத்தின் முதல்வர் ஆ. பரமசிவம் வரவேற்புரையாற்றினார். தமிழன் சிலம்பம் பாசறை நிறுவனர் கார்த்திக் மாணவர்களுக்கு சிலம்பம் வழங்கி தொடங்கி வைத்தார்.

கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். தொடர் பயிற்சி வழங்கிடும் சிலம்பம் பயிற்றுநர்களான செல்வி. சந்தியா, மாஸ்டர் மகேந்திரன், ப.ஹேமலதா, நிவிஷ் ஆண்டனி முதல் நிலை பயிற்சி வழங்கினர்.

வாரம் இறுதி நாள்களில் பயிற்சி வழங்கிட திட்டமிடப்பட்டது. இந்நிகழ்வில் தொழில் பயிற்சி ஆசிரியர்களான K. பாபு மற்றும் ம. ஜெயக்குமார் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO