மணப்பாறை அருகே பிறந்து சில மணி நேரமான பச்சிளம் குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை .

மணப்பாறை அருகே பிறந்து சில மணி நேரமான பச்சிளம் குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை .

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆண்டவர் கோயில் பழைய பாலம் கீழ் முட்புதரில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்பு. அடுத்து சில நிமிடத்தில் தாயும் அதே பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். பிறந்த குழந்தையை புதரில் வீசிய தாய் சசிகலா(38) க/பெ தர்மராஜ் ( 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்) இனாம்ரெட்டியப்பட்டி, வையம்பட்டி ஒன்றியம், சேர்ந்தவர்ஏற்கனவே இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று  அவரது   சகோதரி   வீட்டில் வளர்ந்து வருகிறது.

தற்போது ஆண் நண்பரோடு வாழ்ந்து வந்த நிலையில்  கருவுற்று இருந்த நிலையில்  நேற்று இரவு  சசிகலாவுக்கு வீட்டில் பிரசவம் ஆண நிலையில் இன்று காலை ஆண்டவர் கோவில் பழைய பாலம் அருகில் முட்புதரில் குழந்தையை  வைத்து விட்டு தாய் சசிகலா சிறிது தூரம் சென்றதும் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளார்.

அவ்வழியே சென்ற பொதுமக்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பச்சிளம் குழந்தை பிரிவில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் சசிகலா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO