காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – ஆயிரக்கணக்கான லிட்டர் வீண்

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – ஆயிரக்கணக்கான லிட்டர் வீண்

குளித்தலை அடுத்த வதியம் பகுதி காவிரி ஆற்றின்படுகையிலிருந்து எடுக்கப்படும் காவிரி குடிநீர் மணப்பாறை – குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் வழியாக மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மாகாளிப்பட்டியில் பாலம் அருகே  துவரங்குறிச்சி வரை செல்லும் காவிரி குடிநீர் பிரதான குழாயிலிருந்து தண்ணீர் உடைந்தது. இதனால் சுமார் 30 அடி உயரத்திற்கு குடிநீர் பீறிட்டு அடித்து ஆறாக ஓடி அருகில் இருந்த ஆற்றுபடுகையில் வீணாக கலந்தது.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் பீறிட்டு அடித்ததால் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி தரையில் ஓடியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO