சிறப்பு காவலர்களாக பணியாற்ற முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

சிறப்பு காவலர்களாக பணியாற்ற முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்-2024-ல் சிறப்பு காவலர்களாக முன்னாள் படைவீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணி என்பது தேசத்திற்கு ஆற்றுகின்ற ஜனநாயக கடமையாகும். தன்னலம் கருதாது தேசத்திற்கு நற்பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள் மீண்டும் தேசப்பணியாற்றிட நல்வாய்ப்பாக கருதி தேர்தல் பணியாற்றிட,

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் / படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தான தங்களது விருப்பத்தினை “துணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 19ஏ, வார்னர்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி” என்ற முகவரிக்கு நேரில் அணுகி உரிய விருப்ப விண்ணப்பத்தினை சமர்ப்பிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision