போட்டோ ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமராக்கள் கொள்ளை

போட்டோ ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமராக்கள் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள இந்திரா திரையரங்கம் அருகில் ஒய்வு பெற்ற இரயில்வே பாதுகாப்புப்படை வீரர் முத்துப்பாண்டி என்பவர் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த கடையினை அவரது மகன் சந்தோஷ் நிர்வகித்து வந்த நிலையில், நேற்று (14.11.2022) இரவு கடையினை பூட்டிவிட்டு சென்ற சந்தோஷ் இன்று (15.11.2022) காலை நிகழ்ச்சி ஒன்ற்றிற்கு போட்டோ எடுக்க கேமரா எடுக்க வந்த போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷெட்டர்கள் திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்

பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த சந்தோஷ், அங்கு  வைத்திருந்த கேமரா, லென்ஸ்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஸ்டுடியோ உபகரணம் மற்றும் பணம் ரூ 4 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை போலீஸார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO