தாய், மகனை கொன்று கார் டிரைவர் தற்கொலை

தாய், மகனை கொன்று கார் டிரைவர் தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார். கார்த்திகேயன் தாய் வசந்தா (63). இவர்கள் அனைவரும் அகிலா நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். கார்த்திகேயன் மூன்றாண்டுகளுக்கு முன்பு துபாயில் கார் டிரைவராக வேலை சென்ற அவ்வப்போது விடுமுறையில் அவர் ஊருக்கு செல்வது வழக்கம்.

வசந்த பிரியா ஒரு தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து திருச்சி வந்துள்ளார். இந்த நிலையில் வசந்த பிரியா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்து. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. உடனடியாக வசந்த பிரியா கீழ் வீட்டில் இருந்தவர்களிடம் இது பற்றி கூறினார்.

வீட்டின் அருகிலிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் பக்கவாற்று சுற்றுச்சுவர் வழியாக ஏறி மாடி வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது அங்கு கார்த்திகேயன் அவரது தாய் வசந்தா, மகன் சாமிநாதன் ஆகியோர் தூக்கு போட்ட நிலையில் பிணமாக நிலையில் இருந்துள்ளனர். இதைப்பற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே கதவை உடைத்து தூக்கில் தொங்கிய அவர்களின் உடல்களை மீட்டு கீழே இறக்கினர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக கார்த்திகேயன் தாய் மற்றும் மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO