மத்திய மண்டல காவல்துறை தலைவர் திருச்சி அலுவலகம் முற்றுகை - சாலை மறியல் பரபரப்பு

மத்திய மண்டல காவல்துறை தலைவர் திருச்சி அலுவலகம் முற்றுகை - சாலை மறியல் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு இவருடைய இரண்டாவது மகள் தமிழழிகியை (26). பேராவூரணி சேர்ந்த பாலமுருகனுக்கு கடந்த (2019) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதை தொடர்ந்து தமிழழகின் கணவர் சிங்கப்பூர் சென்ற நிலையில், தமிழ் அழகி கணவர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் அந்தப் பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தனியாக வசித்து வந்த தமிழழகியை செல்போனில் படம் பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண் தூக்கிட்டு (03.06.2021) தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆகாஷ் விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்பொழுது அவர்கள் ஜாமீன் பெற்று வெளியே வந்து மீண்டும் தமிழ் அழகியின் குடும்பத்தை மிரட்டி வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதை தொடர்ந்து தனது மகளின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது குற்றப்பத்திரிகை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றும் ஜாமினில் வெளிவந்த நபர்கள் தங்களை மிரட்டுவதாகவும் கூறி பட்டுக்கோட்டை டிஎஸ்பியிடம்  முறையிட்டுள்ளனர். சட்ட நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தை முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் டிஎஸ்பி முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து சாலையில் அமர்ந்து இருந்தனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சாலையில் அமர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக சட்டை பிடித்து இழுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலக காவல் ஆய்வாளர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO